குடியுரிமை திருத்த சட்டத்துக்க எதிராக கோலம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்க எதிராக கோலம்

சென்னை:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் திமுக சால்பில் கோலம் வரைந்து எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

குடியுரிசை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து கலவரங்கள் மற்றும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து வரும் இந்த போராட்டம், தற்போது தமிழகத்தில் திமுக சார்பில் கோலம் வரைந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீடு, ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் சிஐடி நகரில் உள்ள திமுக எம்பி கனிமொழியின் வீட்டு வாசலில் இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் வரையப்பட்டிருந்தது.

அதேபோல், திமுக எம்பி., கணிமொழி உள்ளிட்டோர் வீடுகளிலும் கோலமிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், திமுக மகளிரணியினர் பல்வேறு பகுதிகளில் ரங்கோலி வரைந்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்களை எழுதியிருந்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்