புதுடெல்லி:
அயோத்தி நில வழக்கின் தீர்ப்பால் பா.ஜ.,வின் அரசியல் செய்வதற்கான கதவுகளை மூடியுள்ளது என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. ராமர் கோயில் கட்டப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம்.
இந்த தீர்ப்பு ராமர் கோயில் கட்டுவதற்கான கதவுகளை மட்டும் திறக்கவில்லை. பா.ஜ., உள்ளிட்ட தரப்பினர் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்வதற்கான கதவுகளையும் மூடியுள்ளது என அவர் தெரிவித்தார்.