புதுடெல்லி:
கார்க்கில் நினைவு தினத்தையொட்டி, டெல்லி போர் நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை தளபதிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து, காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். கார்கில் போர் நினைவிடத்திற்கு சென்று ஜனாதிபதி அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டை பாதுகாத்தவர்களின் வீரத்திற்கும் துணிச்சலுக்கும் தலைவணங்குவதாக தெரிவித்துள்ளார்.