பெங்களூரு:
கர்நாடக மாநிலங்களவை உறுப்பினர் கே.சி.ராமமூர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக மாநிலங்களவை உறுப்பினர் கே.சி.ராமமூர்த்தி தனது பதவியை ராஜினமா செய்தார். துணை குடியரசுத்தலைவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இவரின் ராஜினமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கே.சி.ராமமூர்த்தி போலீஸ் ஐ.ஜி., யாக பெங்களூருவில் பணிபுரிந்தவர். கடந்த 2016ம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.