சென்னை:
தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்ததற்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில், 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மாணவர்கள் மீதான அழுத்தம், சுமை நீக்கப்பட்டுள்ளது. இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.