சென்னை:
தெலங்கானா மாநிலத்தில் ஒரு கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு ஒரு கிலோ அரிசு வழங்கும் திட்டத்துக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தெலுங்கானா மாநிலம் முளுகு மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு ஒரு கிலோ அரிசி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது; இத்தகைய நவீன முயற்சிகள் தொடர வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.