விக்ரம் லேண்டர் தொடர்பு: ராமதாஸ் வருத்தம்

விக்ரம் லேண்டர் தொடர்பு: ராமதாஸ் வருத்தம்

சென்னை:

விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் பலனிளிக்காதது வருத்தமளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நிலவின் தென் பகுதியில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறாதது வருத்தமளிக்கிறது. ஆனாலும், இதை நினைத்து கவலைப்படத் தேவையில்லை. நிலவுக்கு மனிதனை அனுப்புவதற்கான பணிகளை விரைந்து முடித்து சாதனை படைக்க இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், திண்டிவனம் – கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கியுள்ளது வரவேற்கத்தக்க நடவடிக்கை எனவும், கடந்த 10 ஆண்டுகளாக பாமக போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்