சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களின் அச்சத்தை போக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1,,757 பேரின் விவரங்களை சேகரித்து தாக்கல் செய்ய வேண்டும் எனெ பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பு ஆசிரியர்களிடையே ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் அச்சத்தை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.