‘‘7 பேர் தமிழர்கள் அல்ல கொலையாளிகள்’’ என கூறிய கே.எஸ்.அழகிரிக்கு ராமதாஸ் பதிலடி!

‘‘7 பேர் தமிழர்கள் அல்ல கொலையாளிகள்’’ என கூறிய கே.எஸ்.அழகிரிக்கு ராமதாஸ் பதிலடி!

சென்னை:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை எதிர்த்த மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், விடுதலை குறித்து ஆளுநரே முடிவெடுக்கலாம் என இந்த மனுவை தள்ளுபடி செய்தது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில், ‘‘28 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழர்கள் என கூறக்கூடாது; கொலையாளிகள் என்று தான் கூற வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த பேச்சுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில், ‘‘அப்படியானால் 1984ம் ஆண்டில் 3,000 சீக்கியர்களை படுகொலை செய்த காங்கிரசாரை எப்படி அழைப்பதாம்?’’ என்றுகே.எஸ்.அழகிரியின் விமர்சனத்துக்கு ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்