விமானம் மாயம்: விமானப்படை தளபதியிடம் ராஜ்நாத்சிங் பேச்சு!

விமானம் மாயம்: விமானப்படை தளபதியிடம் ராஜ்நாத்சிங் பேச்சு!

புதுடெல்லி:

இந்திய விமானப்படை விமானம் மாயமானதை, விமானப்படை தளபதியிடம் ராஜ்நாத் சிங் போனில் கேட்டறிந்தார்.

இந்திய விமானப்படையின் ஏன் 32 ரக விமானம், 13 பேருடன் அசாமின் ஜோர்கத் விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 12.25 மணிக்கு புறப்பட்டு சென்றுள்ளது. கடைசியாக 1 மணிக்கு தன் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது.

அருணாச்சல பிரதேசத்தின் மென்சுக்கா விமான தளத்திற்கு தரையிறங்க வேண்டிய நிலையில், கடந்த 2 மணி நேரமாக காணமால் போன இந்த விமானத்தை தேடும் பணியில், இந்திய விமானப்படையின் சுகாய் சி130 விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், விமானப்படை விமானம் மாயமான சம்பவம் தொடர்பாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தளபதி ராகேஷ் சிங் பதாரியாவிடம் போனில் கேட்டறிந்தார்.

மேலும், விமானத்தை கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விமானப்படை தளபதி தனக்கு தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். விமானத்தில் இருந்த வீரர்களின் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்தனை செய்வதாகவும், ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்