சென்னை:
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் ரஜினிகாந்த் வாக்களிக்கவில்லை.
பல்வேறு தடைகளைத் தாண்டி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்கான தபால் ஓட்டுகள் இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மும்பையில் படபிடிப்பில் உள்ள நிலையில், நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் வாக்களிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன்.
தபால்வாக்கு இன்று 6.45 மணிக்கு வந்ததால் வாக்களிக்க இயலவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) June 22, 2019