காஷ்மீர் விவகாரம் ராஜதந்திரம்

காஷ்மீர் விவகாரம் ராஜதந்திரம்

சென்னை:

காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு ராஜதந்திரத்தோடு கையாண்டுள்ளது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமளிக்கிறது என தெரிவித்தார்.

மேலும், காஷ்மீர் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, காஷ்மீர் விவகாரம் நாட்டின் நலன் கருதி, ராஜதந்திரத்தோடு கையாண்டு மத்திய அரசு கையாண்டுள்ளது. இது நமது தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விஷயம். இந்த விவகாரத்தை அரசியலாக்காதீர். இது அருமையான விஷயம் என்றும் இதை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்