சென்னை:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு, நடிகர் ரஜினிகாந்த் இலவசமாக வீடு வழங்கினார்.
கடந்த 2018ம் ஆண்டு நவம்பரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. பாதிக்கப்பட்ட மககளுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நாகை மாவட்டம் கோடியக்கரை தலைஞாயிரு கிராமத்தில் கஜா புயலால் பாதிப்புக்குள்ளாகிய ரஜினி மக்கள் மன்றத்தினர் உதவி செய்து வருகின்றனர்.
அப்பகுதியில் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடு கட்டித்தரவும் ரஜினி மக்கள் மன்றம் சார்ப்ல் உறுதியளிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, ரூ.18,50,000 செலவில் கட்டப்பட்ட வீடுகளின் சாவியை பயனாளர்கள் 10 பேருக்கு சென்னை போயஸ் இல்லத்தில் ரஜினிகாந்த் வழங்கினார்.