ரிஷிகேஷ்:
ஆன்மிக பயணமாக ரிஷிகேஷ் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த்துடன் ஏராளமான ரசிகர்கள் அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ஒவ்வொரு படப்பிடிப்பு முடிந்தவுடன், இமயமலைக்கு செல்வது வழக்கம். தற்போது மும்பையில் நடைபெற்றுவந்த ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், நேற்று ரஜினிகாந்த் சென்னையில் இருந்து ஆன்மிக பயணத்துக்கு புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், இன்று காலை உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றார்.
அந்த ஆசிரமத்தில் ரஜினியை பார்த்தவுடன் ஏராளமான ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 10 நாட்கள் ஆட்மிக பயணத்திற்குப்பின், பின்னர், ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்.