கர்ப்பிணிக்கு வளையல் போட்ட ரஜினி

  • In Cinema
  • December 16, 2019
  • 197 Views
கர்ப்பிணிக்கு வளையல் போட்ட ரஜினி

சென்னை:

சென்னையில் கர்ப்பிணி ரசிகையின் ஆசையை நிறைவேற்ற, ரஜினிகாந்த் வளையல் அணிவித்தது நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருவல்லிக்கேணியை சேர்ந்த ராகவா விக்னேஸ் மற்றும் அவரது மனைவி ஜெகதீஸ்வரியும் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள். தர்பார் சூட்டிங்கின்போது ரஜினிகாந்தை இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது தந்தை இடத்திலிருந்து தனக்கு வளைகாப்பு வளையல் அணிவிக்க ஜெகதீஸ்வரி கேட்டுள்ளார்.

உடனடியாக ரஜினிகாந்த் வளைகாப்பு வளையல் வாங்கிவரச்சொல்லி அப்போதே ஜெகதீஸ்வரிக்கு அணிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மற்றும் படக்குழுவினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்