100க்கு 100 அதிசயம்; ரஜினி உறுதி

100க்கு 100 அதிசயம்; ரஜினி உறுதி

சென்னை:

வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை 100க்கு 100 நடத்திக்காட்டுவார்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலகொண்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், ‘கோல்டன் ஐகான்’ என்ற சிறப்பு விருதுக்கு தமிழக மக்கள் தான் காரணம். அந்த விருதை தமிழக மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார்.

மேலும், கமலும் நானும் இணைந்தால் யார் முதல்வர் என்பது குறித்து, கட்சி ஆரம்பித்தால் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அப்போது முடிவு சொல்கிறேன். 2021ல் அரசியலில், தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை 100க்கு 100 நிகழ்த்தி காட்டுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்