சமுதாயம் கெட்டுள்ளது: ரஜினி பேச்சு

  • In Cinema
  • January 14, 2020
  • 200 Views
சமுதாயம் கெட்டுள்ளது: ரஜினி பேச்சு

சென்னை:

சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளதாக துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த துக்ளக் 50வது ஆண்டு விழாவில் ரஜினி பேசுகையில், தற்போதைய சூழலில் சமுதாயம் கெட்டுப்போயுள்ளது. சோ மாதிரியான பத்திரிக்கையாளர் தான் சமுதாயத்துக்கு மிக அவசியம் என அவர் தெரிவித்தார்.

மேலும், பால் போன்ற உண்மை செய்தியில் தண்ணீரை கலக்க கூடாது என்றும், கவலைகளை நிரந்தமாக்கிகொள்வதும், தற்காலிகமாக்கிக்கொள்வதும் நமது கையில்தான் உள்ளது எனவும் ரஜினிகாந்த் பேசினார்.

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில்,துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்