சென்னை:
மக்களின் நலனுக்காக நானும் கமலும் நிச்சயம் இணைவோம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கோவா செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்தார்.
அப்போது, மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என அவர் தெரிவித்தார்.
மேலும், ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, அவரது தனிப்பட்ட கருத்து; அதற்கு பதில்கூற விரும்பவில்லை எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.