சென்னை:
பெரியார் பற்றி நான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, பெரியார் பற்றி நான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என அவர் தெரிவித்தார்.
மேலும், 1971ம் ஆண்டு நடந்த சம்பவத்தையே பேசினேன், கற்பனையாக பேசவில்லை என்றும் பத்திரிகைகளில் வந்த செய்தி அடிப்படையிலேயே நான் பேசினேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.