சென்னை:
தனது வீட்டின் முன் கூடியிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன் இன்று ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்ததனர்.
ரஜினிகாந்த் தமது வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர். ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தவுடன், விடுவிடுவென வீட்டிற்குள் சென்ற ரஜினி, பின்னர் கேட் பகுதியில் நின்றும் பொங்கல் வாழ்த்து கூறினார்.