மே 23க்கு பிறகு ரஜினியின் அரசியல் அறிவிப்பு: சத்ய நாராயண ராவ்

மே 23க்கு பிறகு ரஜினியின் அரசியல் அறிவிப்பு: சத்ய நாராயண ராவ்

திருச்சி:

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து மே 23ம் தேதிக்கு பிறகு நல்ல முடிவு வரும் என அவரின் சகோதரர் சத்ய நாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஓலையூர் அருகே உள்ள குமாரமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள ரஜினியின் தாய் ராம்பாய் – தந்தை ரானோஜிராவின் மணிமண்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தை கடந்த மார்ச் 25 ம் தேதி திறக்கப்பட்டது. இதன் 48வது நாள் மண்டல பூஜை இன்று நடந்தது. இதில் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயண ராவ் கலந்துகொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், ரஜினி படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். படப்பிடிப்பு முடிந்த பிறகு நிச்சயம் இங்கு வருவார்.

மேலும், தனது அரசயில் பிரவேசம் குறித்து மே 23ம் தேதிக்கு பிறகு நல்ல முடிவு அறிவிப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார். அவரிடம் சிறப்பான திட்டங்கள் உள்ளது. ஒரு வகையில் அரசியலுக்கு தாமதமாவதும் நல்லதுதான். எனவே நல்லதே நடக்கும் என்று அவர் கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்