ரிஷிகேஷ்:
ஆன்மிக பயணமாக ரிஷிகேஷ் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அங்குள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் தனது ஒவ்வொரு படப்பிடிப்பு முடிந்தவுடன், இமயமலைக்கு செல்வது வழக்கம். தற்போது மும்பையில் நடைபெற்றுவந்த ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், நேற்று ரஜினிகாந்த் சென்னையில் இருந்து ஆன்மிக பயணத்துக்கு புறப்பட்டு சென்றார்.
கடந்த 14ம் தேதி காலை உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றார்.
10 நாட்கள் ஆன்மிக பயணமாக சென்றுள்ள ரஜினிகாந்த், அங்குள்ள டீக்கடையில் டீ குடிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.