சென்னை:
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஒற்றைத்தலைமை குறித்து பேசவில்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஒற்றைத்தலைமை குறித்து பேசவில்லை எனவும், தற்போது உள்ள தலைமை அடிப்படையில் செயல்பட கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது எனவும், ராஜன் செல்லப்பாவும் அதை ஏற்றுக் கொண்டார் எனவும் தெரிவித்தார்.
மேலும், கட்சியில் எந்த பிரச்னையும் இல்லை. கூட்டத்திற்கு சிரித்துக் கொண்டே சென்றோம், சிரித்துக் கொண்டே வெளியே வந்தோம் எனவும் அவர் தெரிவித்தார்.