‘‘அதிமுக முன்னிலை வகிப்பது மகிழ்ச்சி’’ – ராஜேந்திர பாலாஜி

‘‘அதிமுக முன்னிலை வகிப்பது மகிழ்ச்சி’’ – ராஜேந்திர பாலாஜி

சென்னை:

வேலூர் தொகுதியில் அதிமுக முன்னிலை வகிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், வேலூர் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில், தற்போதைய நிலவரப்படி அதிமுக முன்னிலை வகிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. சிறுபான்மையினர் உட்பட்ட அனைத்து சமுதாயத்தினரும் அதிமுகவுக்கு வாக்களித்துள்ளனர் என்பது தெரியவருகிறது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, அதிமுகவின் ஏ.சி.சண்முகம் 2,45,273 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுகவின் கதிர் ஆனந்த் 2,41,377 வாக்குகள் பெற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்