சென்னை:
நடிகர் ரஜினியுடன் போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்று கூறி பலரிடம் 50 லட்சம் ரூபாய் வரைக்கும் சுருட்டிய ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் ரஜினி ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்கள் ஒரு முறையேனும் ரஜினியை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவார்கள்.
அப்படி இருப்பவர்களின் ஆசையை தூண்டிவிட்டு பண மோசடி செய்துள்ளார் ரஜினி பழனி என்பவர்.
சேலம் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர் என்று தன்னை கூறிக்கொண்டு வாட்ஸ்அப் குருப் ஆரம்பித்துள்ளார்.
இதில் ரஜினி ரசிகர்கள் அனைவரும் இணைய வைத்துள்ளார்.
அப்படி இணைந்தவர்களிடம் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொடுப்பதாக இதுவரைக்கும் 50 லட்சத்துக்கும் அதிகமாக பணத்தை ஏமாற்றியதா கூறப்படுகிறது.
இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிகாந்தின் ரசிகைகள் புகார் அளித்துள்ளனர்.
புகாரை பெற்ற காவல் ஆணையர் அலுவலகம், டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
இது ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்துக்கும், மோசடி செய்த நபருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று புகார் கொடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.