அய்யோ அம்மா.. வலிக்குதே.. ஸ்ரெக்சரில் வந்த சரவணபவன் அதிபர்!

அய்யோ அம்மா.. வலிக்குதே.. ஸ்ரெக்சரில் வந்த சரவணபவன் அதிபர்!

சென்னை:

ஜீவாஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் அதிபர் ராஜகோபால், ஆம்புலன்ஸ் மூலம் படுத்தபடுக்கையாக சென்னை குற்றவியல் நீதிமன்றம் ஆஜரானார்.

சாந்தகுமார் கொலைவழக்கில் ஆயுள் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள சரவணபவன் அதிபர் ராஜகோபால் சரணடைய கெடு நேற்று முன்தினத்துடன் முடிந்தது. உடல்நிலையை காரணம் காட்டி தண்டனை காலம் முழுவதையும் மருத்துவமனையிலேயே கழிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீதான விசாரணையில், அவரின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால், உடனடியாக சரணடைய ராஜகோபாலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் ராஜகோபால் ஆஜரானார். அவர் ஆம்புலன்சில் படுத்த படுக்கையாக அய்யோ அம்மா வலிக்குதே என கத்தியவாறு வந்திருந்தார். ஆனால், நீதிபதியோ ராஜகோபாலை உடனடியாக புழல் சிறையில் அடைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்