BREAKING ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே வீரர் ரெய்னா விலகல் !!

  • In Sports
  • August 29, 2020
  • 165 Views
BREAKING ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே வீரர் ரெய்னா விலகல் !!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை அணி போட்டியில் பங்கேற்க துபாய் சென்றுள்ளது. அங்கு செப்டம்பர் 13ஆம் தேதி ஐபிஎல் தொடங்கவுள்ளது. இதனால் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட தயாராகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சென்னை அணியின் நிர்வாகிகள், பந்துவீச்சாளர் என 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ரெய்னா போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இதனிடையே சொந்த காரணங்களுக்காக ரெய்னா போட்டியில் இருந்து விலகியுள்ளதாகவும், அவர் தற்போது நாடு திரும்புவதாகவும் சிஎஸ்கே அணி நிர்வாகம் கூறியுள்ளது

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்