சென்னை:
தமிழகத்தின் சில இடுங்களில் அடுத்த 24 மசணி நேரத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், தற்போது நிலவிவரும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, உள் தமிழகம் மற்றும் தென் தமிழகம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும் காணப்படும். அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வரை வெயில் நிலவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.