சென்னை:
தனியார் கட்டடங்கள் மற்றும் வீடுகளில் 3 மாதத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொழில் நிறுவனங்கள், வீடு உள்ளிட்ட அனைத்து கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும், அரசு கட்டடங்களிலும் கட்டமைப்பை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.