சென்னை:
சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். வடதமிழகம், தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை நகர், மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என கூறினார்.