சென்னை:
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழையும் 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.