தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழை

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழை

சென்னை:

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு, கடலோர மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் கடலூர் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்