2 நாட்களுக்கு கனமழை..! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

2 நாட்களுக்கு கனமழை..! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

சென்னை:

தமிழகத்தில் நிலவிவரும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும், மீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்