சென்னை:
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என சென்னைன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில்லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செனனையை பொறுத்தவரை வான பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.