சென்னை:
அடுத்த 24 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடம்.
சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடம்.
குமரிக்கடல் பகுதியில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடம் என்பதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.