சென்னை:
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் அடுத்த வரும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளதாவது: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யக் கூடும்.
தமிழக கடற்கரை பகுதிகளில் மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள், அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்.
மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம். வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ஒரு சில இடங்களில் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.