புதுடெல்லி:
ரயில்வே துறை தனியார் மயத்தை நோக்கி செல்வதாக பயணிகள் குற்றச்சாட்டுகள் முன்வைத்தனர்.
இந்நிலையில், ரயில்வே தனியார் மயம் தொடர்பான கேள்விக்கு மக்களவையில் இன்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அதில், இந்தியன் ரயில்வேயை தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை, தனியார் மூலம் இயக்கப்படும் பயணிகள் ரயில் பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
டெல்லி- லக்னோ தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி, இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.