புதுடெல்லி:
கனமழை காரணமாக கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை செய்து தர பிரதமர் மோடியிடம் ராகுல்காந்தி பேசியுள்ளார்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொச்சி விமானநிலையமும் நேற்றிலிருந்து மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர கோரி பிரதமர் மோடியிடம், வயநாடு எம்பி.,யும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி தொலைபேசியில் பேசியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.