ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.
ஜம்மு காஷ்மீர், மற்றும் லடாக்கை யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. அரசியல் கட்சி தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்தது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் நிலவரம் பற்றி ஆய்வு செய்வதற்கு ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அங்கு சென்றனர்.
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு மீண்டும் அனைவரையும் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.