ரேவரி:
தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ராகுல் காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு ஹரியானா மாநிலம் மகேந்திரகரிலிருந்து ஹெலிகாப்டரில் டெல்லிக்கு புறப்பட்டார். ஆனால், மோசமான வானிலை காரணமாக ரேவரியில் அவசர அவசரமாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.
ரேவரி கே.எல்.பி.கல்லூரியில் தரையிறங்கிய ராகுல், பின்னர் கார் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.