டெல்லி:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரஹானே, அடுத்து வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு மாறுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே, ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். அவர் தலைமையில் அணி தொடர் தோல்விகளை சந்தித்ததால் அவர் நீக்கப்பட்டு ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறுகிறார். அவரை வாங்குவதற்கான பேச்சு தற்போது அந்த அணி சார்பில் ஈடுபட்டுள்ளனர்.