ராகுல்காந்தி மீதான இரட்டை குடியுரிமை வழக்கு தள்ளுபடி!

ராகுல்காந்தி மீதான இரட்டை குடியுரிமை வழக்கு தள்ளுபடி!

புது டெல்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான இரட்டை குடியுரிமை வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டபோது, ராகுல்காந்தி பிரிட்டனில் உள்ள நிறுவனத்தில் சில முதலீடுகளை செய்திருப்பதாக தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரிட்டன் குடிமகன் என்ற முறையில், ராகுல் காந்தி பிரிட்டனில் முதலீடு செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் அப்போது சுட்டிக்காட்டி இருந்தன. பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற ராகுல் காந்தியின் பட்டமளிப்பு சான்றிதழில் அவரது பெயர் ராகுல் வின்சி என்ற இத்தாலி துணை பெயருடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அப்போது அமேதி தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் துருவ் லால் என்பவர், பிரிட்டன் குடிமகனான ராகுல் நம் நாட்டில் தேர்தலில் எப்படி போட்டியிடலாம் என தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்திருந்தார்.

இதேபோல், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியும் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு உள் துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியிது.

இதனையடுத்து, பிரிட்டன் குடியுரிமை பெற்ற ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடக்கூடாது என இரண்டு பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இது குறித்த விசாரித்த நீதிபதிகள், ராகுல் காந்தி மீதான இரட்டை குடியுரிமை வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்