புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு இன்று டெல்லியில் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை இறுதி கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயு சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
வரும் 23ம் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினமே காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
இந்நிலையில், பா.ஜ., இல்லாத ஆட்சியை அமைக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். இன்று காலை ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டில்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து ராகுல்காந்தி, மா.கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி¬யும் சந்தித்தார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கும் அழைப்பு விடுத்துள்ளார் சந்திரபாபு நாயுடு.
ராகுலுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.