மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி மனு

மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி மனு

சென்னை:

ராதாபுரம் சட்டசபை தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை உத்தரவுக்கு தடை கோரி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

ராதாபுரம் தொகுதியில் 49 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்குமாறு தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.

இந்நிலையில், மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு அக்டோபர் 3ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு திமுக வேட்பாளர் அப்பாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்