பசல்:
சுவிஜர்லாந்து நாட்டின் பசல் நகரில் நடந்து வரும் பிடபுள்யூஎப் உலக சாப்பியன்ஸ் ஷிப் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் சாய் பிரனீத் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இன்று நடந்த காலிறுதி போட்டியில் சீன தைபேயின் டாய் சூயிங் வீரரை 12-21, 23-21, 21-19 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து வெற்றிபெற்று அரையுறுதிக்கு தகுதிபெற்றார்.
இதே போல ஆடவர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரனீத் இந்தோனேசியாவைச் சேர்ந்த உலகின் 4ம் நிலை வீரரான ஜொனாதன் கிறிஸ்டியை எதிர்கொண்டார்.
ஆரம்பம் முதலே முன்னிலை பெறத் தொடங்கிய சாய் பிரனீத், 24-22, 21-14 என்ற நேர் செட்டில் எதிராளியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.