புதுடெல்லி:
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்து, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடியின் வாழ்த்து செய்தியில், இந்தியாவின் பெருமை, ஒரு தங்கத்தையும், பெருமையையும் வீட்டிற்கு கொண்டு வந்த ஒரு சாம்பியன். பி.வி சிந்துவை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு மிகச் சிறந்த வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்தார்.
முன்னதாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ரூ 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கி பி.வி.சிந்துவை ஊக்குவித்தார்.