ஐதராபாத்:
உலக சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, துணை குடியரசுத்தலைவர் வெங்கைய்ய நாயுடுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பி.வி.சிந்து தனது குடும்பத்தினருடன் நேற்று திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து, இன்று ஐதராபாத்தில் உள்ள துணை குடியரசுத்தலைவர் வெங்கைய்ய நாயுடுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.