திருப்பதி:
உலக சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாரி தரிசனம் செய்தனர்.
தனது குடும்பத்தினருடன் சென்ற அவர்களுக்கு, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. மேலும், பி.வி.சிந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், போட்டிகளில் சிறந்த முறையில் விளையாடி வெற்றிபெற வழிபட்டதாக அவர் தெரிவித்தார்.