உலகிலேயே சுத்தமான பெட்ரோல், டீசலை வழங்கும் முதலாவது நாடு என்ற பெருமையை பெற உள்ள இந்தியா

உலகிலேயே சுத்தமான பெட்ரோல், டீசலை வழங்கும் முதலாவது நாடு என்ற பெருமையை பெற உள்ள இந்தியா

உலகிலேயே மிகவும் சுத்தமான பெட்ரோல் மற்றும் டீசலை, வழங்கும் முதலாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற உள்ளது.

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து நாடு முழுதும் பி.எஸ். 6 தரத்திலான ( BS-VI) பெட்ரோல், டீசல் மட்டுமே விற்கப்பட உள்ளது.  வாகனங்கள் வெளியிடும் புகையால் முக்கிய நகரங்கள் உள்ளிட்ட நாட்டின் பெரும்பான்மையான இடங்கள் மாசுபடுவதை தடுக்கும் நோக்கில் பிஎஸ் 6 தர எரிபொருள் சந்தைப்படுத்தப்படுகிறது

.இதற்காக அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் 95 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இறுதியில் பிஎஸ் 6 தர எரிபொருள் உற்பத்தி துவங்கி விட்டதாக  இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயம் டெல்லியின் மாசடைதல் நிலைமையை கருத்தில் கொண்டு கடந்த 2018 ஏப்ரல் மாதமே அங்கு பிஎஸ் 6 எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்