மும்பை:
மகாராஷ்டிர மாநிலம், புனே அருகே ஜவுளி குடோன் ஒன்றில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதில் 5 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர்.
புனே அருகே உள்ள உருளி தேவச்சி கிராமத்தில் உள்ள ஜவுளி குடோன் ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த குடோனில் 5 தொழிலாளர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தீவிபத்தில் மூச்சுதிணறல் ஏற்பட்டு, 5 தொழிலாளர்களும் உயிரிழந்தனர்.
5 தீயணைப்பு வண்டிகளில் அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேர போரட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.